"நாங்க எந்த தப்பும் பண்ணல" - "சாகவும் தயார்" சென்னையில் கண்ணீருடன் கதறும் கடை ஓனர்கள் | Chennai

Update: 2024-10-19 09:49 GMT

சென்னை அடுத்த தாம்பரத்தில், ஆக்கிரமிப்பு எனக்கூறி சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக, பெண் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்திற்கு வந்த எம்.பி., டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசனை சந்தித்து அவர்கள் முறையிட்டனர். எனினும், தங்களது கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லையென, பெண் வியாபாரிகள் புலம்பினர். அதிலும் ஒருவர், மற்றவர்களுக்கு கடை கிடைக்க தான் சாகவும் தயார் எனக்கூறி, விரக்தியை வெளிப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்