8000 அழுகிய முட்டைகளில் தயாராக இருந்த கேக்... திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்

Update: 2024-10-19 09:52 GMT

நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை கொள்முதல் செய்து, திருச்சி மாநகரில் உள்ள பேக்கரிகளில் கேக் மற்றும் பிரட்டுகள் தயார் செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆழ்வார்தோப்பு, ஓ.பாலம் பகுதிகளில் உள்ள பேக்கரிகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சுமார் எட்டாயிரம் அழுகிய முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 215 கிலோ கேக் மற்றும் பிரட்டுகளை கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து 2 பேக்கரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், பேக்கரி உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று அழுகிய முட்டைகள் மற்றும் காலாவதியான பொருட்களைக் கொண்டு உணவுப் பொருட்கள் தயாரித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்