இலங்கையில் ஜனநாயகம் இல்லை - அமைச்சர் ராதாகிருஷ்ணன்

இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதாகவும் ஆனால் இலங்கையில் ஜனநாயகம் பெயரளவிலேயே இருப்பதாகவும் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-01 21:34 GMT
இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதாகவும், ஆனால் இலங்கையில் ஜனநாயகம் பெயரளவிலேயே இருப்பதாகவும் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இலங்கை நுவரெலியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ நிதி அமைச்சராகவோ வர முடியும். ஆனால் இலங்கையில் அது ஒரு கனவாகவே இருக்கும் என்றார்.இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தியாவில் ஒரு கருத்தையும், இலங்கையில் ஒரு கருத்தையும் சொல்லக் கூடியவர் என்றும் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்