நிலைகுலைந்த வயநாடு - தமிழக சிறுவன் செய்த மறக்க முடியாத உதவி

Update: 2024-08-04 16:10 GMT

வயநாடு பேரிடருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கிய சிறுவனுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாராட்டு தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர் முகாமில் கட்டப்பட்டு வரும் வீடுகளை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த கொட்டுக்காரண்பட்டியை சேர்ந்த கற்பூரசுந்தரபாண்டி என்பவரின் 4 வயது மகன் பிடல் காஸ்ட்ரோ, தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வயநாடு நிவாரண நிதியாக அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்