லஞ்சம் வாங்க ஆவலோடு காத்திருந்த ஊ.ம. தலைவர் - சுத்துப்போட்டு விஜிலென்ஸ் கொடுத்த அதிர்ச்சி

Update: 2024-07-28 05:33 GMT

லஞ்சம் வாங்க ஆவலோடு காத்திருந்த ஊ.ம. தலைவர் - சுத்துப்போட்டு விஜிலென்ஸ் கொடுத்த அதிர்ச்சி

விருதுநகர் அருகே 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் 5000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மணிமாறன் என்பவர் புதிதாக வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் சான்றிதழ் கேட்டு ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜனை அணுகியுள்ளார். அனுமதி சான்றிதழ் கொடுப்பதற்கு 15,000 ரூபாய் லஞ்சமாக கேட்பதாக, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மணிமாறன் புகார் அளித்தார். தொடர்ந்து, போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாயை லஞ்சமாக வழங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜனை கையும் களவுமாக கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்