ஆட்டம்போட்ட முதலை... அலேக்காக பிடித்து தூக்கி வந்த வனத்துறை... திக் திக் காட்சி

Update: 2024-09-18 17:16 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டை ஒன்றில் பருவ மழையின் போது வனப்பகுதியில் இருந்து முதலை ஒன்று அடித்து வரப்பட்டது. இதனையடுத்து குட்டையில் இருக்கும் முதலையை பிடிக்க வனத்துறையினர் நேற்று தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மோட்டார் பம்ப் செட் மூலம் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, தண்ணீர் செல்ல ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. இன்று நீர் மட்டம் குறைந்ததும் வனத்துறையினர் கயிற்றால் சுருக்கு அமைத்து போராடி முதலையை பிடித்தனர். பிடிபட்ட முதலையை பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்