மூச்சையே நிறுத்திய எல்லை மீறிய உல்லாச உறவு... ஆசையாய் சென்று பிணமான சோகம்

Update: 2024-10-10 09:51 GMT

விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் கிராமத்தை சார்ந்த கொத்தனாரான ருத்ரகுமார் என்பவர் சாக்கில் கட்டப்பட்டநிலையில், கேணிப்பட்டு அருகே சாலையோரத்தில் பிணமாக கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசாரின் விசாரனையில் கொத்தனாரான ருத்ர குமாருக்கும் காடாங்குளத்தை சார்ந்த சரஸ்வதி என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கணவர் தனஞ்செயன் தனது மனைவி மூலம் ருத்ரகுமாரை வீட்டுக்கு அழைத்து அடித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து அவர் விபத்தில் இறந்தது போல காட்டுவதற்காக சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலி சரஸ்வதி அவருடைய கணவர் தனஞ்செயன் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்