தாயின் சேலையில் நின்றுபோன 9ம் வகுப்பு மாணவி மூச்சு.. பெரும் பதற்றம்

Update: 2024-09-25 09:15 GMT

வாணியம்பாடி அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய 9ஆம் வகுப்பு சிறுமி கழுத்து இறுக்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வாணியம்பாடியை அடுத்த அரப்பாண்ட குப்பத்தை சேர்ந்த வேலு - ஜெயந்தி தம்பதியரின் மூன்றாவது மகள் ரூபிகா. தும்பேரி அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், வீட்டு கொட்டகையில் சேலையால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடியுள்ளார். அப்போது, கழுத்தில் சேலை இறுக்கியதால் மயங்கி விழுந்து இறந்துள்ளார். தகவலறிந்து உடலை மீட்ட போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில், சிறுமியின் உறவினர்கள் குவிந்து, இறப்பு குறித்து ஒருவரை ஒருவர் பேசி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் காணப்பட்டதால் போலீசார் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்