கோர தாண்டவமாடிய சூறை மழை.. சுழற்றி அடித்ததில் சிக்கிய ஆட்டோ. டிசம்பர்ல சென்னையை பாத்த மாறியே இருக்கே

Update: 2024-07-16 11:30 GMT

நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. பிங்கர் போஸ்ட் பகுதியில் இரண்டு மரங்கள் விழுந்ததில் மூன்று மின்கம்பங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. தற்போது மின் கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு உதகை நகருக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்