``ID கார்டு போட்டது தப்பா..? புள்ளய கொன்னுட்டாங்களே'' சென்னையை உலுக்கிய மாணவன் கொ*ல

Update: 2024-10-09 10:21 GMT

சென்னையில் ரூட் தல விவகாரத்தில், இரு கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பொன்பாடியை சேர்ந்த சுந்தர், சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4-ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக்கல்லூரி மாணவர்களுக்கும் இடையே, அடையாள அட்டை அணிந்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில், மாணவர் சுந்தரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10க்கும் அதிகமானோர் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுந்தர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சக மாணவர்களால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்