விபத்தில் பலியான காவலர்... ``ரூ.20 லட்சம்..'' ஓடிவந்து உதவிகரம் நீட்டிய சக காவலர்கள்

Update: 2024-10-23 16:55 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு போலீசார் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். வாணியம்பாடியை சேர்ந்த அண்ணாமலை என்பவர், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்த நிலையில், இருசக்கர வாகன விபத்தில் சமீபத்தில் உயிரிழந்தார். காவலர் அண்ணாமலையின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், தமிழக காவல்துறையின் காக்கும் உறவுகள் குழு சார்பில், 20 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிவாரணத் தொகைக்கான காசோலையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா முன்னிலையில், அண்ணாமலையின் குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்