தமிழக அரசு vs ஆம்னி பேருந்துகள் - உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-07-02 10:26 GMT

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் மீண்டும் இயக்கப்படுகின்றன.தமிழகத்திலிருந்து பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு மட்டும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே நேரம் தமிழகத்திற்குள் வெளிமாநில பதிவுடன் கூடிய ஆம்னி பேருந்துகள் தற்போது வரை இயக்கப்படவில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தகவல் கூறியுள்ளது. வெளிமாநில பதிவு எண் கொண்ட 838 பேருந்துகளை தமிழகத்தில் இயக்க கடந்த மாதம் 17ஆம் தேதி தமிழ்நாடு போக்குவரத்து துறை தடை விதித்தது. இதை எதிர்த்து ஆம்னி பேருந்து உரியைாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,

ஆல் இந்தியா பர்மிட் மூலம் ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கிக் கொள்ளலாம் என்றும் அதை சிறைபிடிக்க கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்