பூமியில் கால் வைத்ததும் கழுத்து, கை அறுபட்ட பச்சிளம் குழந்தை.. அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-10-23 08:38 GMT

பூமியில் கால் வைத்ததும் கழுத்து, கை அறுபட்ட பச்சிளம் குழந்தை.. அதிர்ச்சி காட்சிகள்


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை, கழுத்து மற்றும் கை அறுபட்ட நிலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கம்புணரி-சுக்காம்பட்டி சாலை குடியிருப்பு பகுதியில் இரவு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தேடியபோது, பச்சிளம் குழந்தை கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குழந்தையை ஒரு பெண் மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். சம்பவ இடத்திற்கு வந்த அரசு சுகாதார நிலைய குழந்தைகள் நல மருத்துவர்கள், குழந்தைக்கு முதலுதவி செய்தனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில், குழந்தையை தூக்கி வீசிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்