சாதியை சொல்லி திட்டி கொன்ற கும்பல் - ரெட்டை ஆயுள் தண்டனை கொடுத்து நீதிமன்றம் அதிரடி

Update: 2024-10-02 02:28 GMT

தமிழகத்திலேயே எஸ்சி, எஸ்டி வழக்கில் முதல் முறையாக 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்சி,எஸ்டி சிறப்பு நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் தெரணி கிராமத்தை சேர்ந்த பால்கறக்கும் கூலித்தொழிலாளி மணி. இவர், அதே ஊரை சேர்ந்த தனபால், பிரபு, குமார், சங்கர் ஆகிய நான்கு பேரின் மாடுகளுக்கு பால் கறந்து கொடுத்து வந்தார். பால் கறந்ததற்கான நிலுவை தொகையை தருமாறு நான்கு பேரிடமும் மணி தொடர்ந்து கேட்டுள்ளார். இந்நிலையில் மணியை வீட்டில் இருந்து வரவழைத்து நான்குபேரும் சாதி பெயர் சொல்லி திட்டியுள்ளனர். பிறகு பலமாக தாக்கவும் செய்துள்ளனர். இதில் படுகாயம அடைந்த மணி, சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த வழக்கில் 4 பேருக்கும் ரெட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்