கும்பலை ஏவி நண்பனை கொலை செய்த நபர்.. போனில் கிடைத்த போட்டோஸ்

Update: 2024-07-07 11:38 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் அன்பு... இவர் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது செல்போனில் ஏராளமான பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது. அன்புவின் நண்பரான தமிழரசனுக்கு தெரிந்த பெண்களின் புகைப்படங்களும் அதில் இருந்த நிலையில், அன்புவை கொலை செய்ய நண்பர்களுடன் தமிழரசன் திட்டமிட்டுள்ளார். கடந்த 3ம் தேதி ஒரு கும்பல் மூலம் அன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தமிழரசன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்