2 வயது குழந்தை உயிரை பறித்த டிவி.. அதிர்ச்சியில் உறைந்த தாய் - பெற்றோர்களே உஷார்

Update: 2024-10-19 10:49 GMT

திண்டிவனம் கிடங்கல்-1 சுந்தரமூர்த்தி தெருவைச் சேர்ந்த உதயகுமார் என்பவரது இரண்டரை வயது குழந்தை அஸ்வின், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேஜை மீது இருந்த டிவி எதிர்பாராத வகையில் குழந்தையின் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த குழந்தை, திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி. விழுந்து குழந்தை இறந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்