மனைவியுடன் உல்லாசமாக இருந்த காதலன்.. வெறியாட்டம் ஆடிய கணவன்..கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...

Update: 2024-09-08 02:52 GMT

மனைவியுடன் தகாத உறவிலிருந்த இளைஞரைத் தேடிச் சென்ற நிலையில் அவரது தம்பியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி செல்லப்பா-சக்தி. சக்திக்கு அதே பகுதியைச் சேர்ந்த

வினோத்குமார் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி தனது வீட்டில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வினோத்தை எச்சரித்து அனுப்பி இருக்கிறார் செல்லப்பா. இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் வீட்டை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்று இருக்கிறார் செல்லப்பா. இதனைத் தொடர்ந்து வினோத்குமாரைக் கொலை செய்வதற்காக அரிவாளுடன் அவரது வீட்டிற்கு சென்ற இருக்கிறார் செல்லப்பா . ஆனால் அங்கு வினோத்குமார் இல்லாததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தம்பியான பிரவீனை வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த பிரவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த செல்லப்பாவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலையான பிரவீன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்காக தயாராகிக் கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்