பார்வையற்ற காதல் ஜோடிக்கு மகனால் வந்த சோதனை... சொல்ல முடியா துயரம்... கலங்கடிக்கும் தாயின் சொல்

Update: 2024-10-11 10:25 GMT

பார்வையற்ற காதல் ஜோடிக்கு மகனால் வந்த சோதனை... சொல்ல முடியா துயரம்... கலங்கடிக்கும் தாயின் சொல்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான பெற்றோரை மகன் கைவிட்ட நிலையில், அதிகாரிகளும் பாராமுகம் காட்டுவதால் மாதாந்திர உதவித் தொகை கூட கிடைக்காமல் ஒரு வேளை சாப்பாட்டுக்கே பரிதவித்து வரும் அவல நிலை கலங்கச் செய்கிறது...

தூத்துக்குடி புது பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி-மாலதி தம்பதி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்... காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சுரேஷ் என்ற மகன் உள்ள நிலையில், சுரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாகி தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது...

நாற்காலிகளுக்கு வயர் பின்னும் வேலை செய்து வந்த பெரியசாமிக்கு தொழில் முடங்கிய நிலையில் மாதாந்திர உதவித் தொகை மட்டுமே ஒரே ஆதாரமாக இருந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக அதுவும் கிடைக்காததால் ஒருவேளை உணவுக்குக் கூட வழியின்றி பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி வழிதேடி அலைவது காண்போரைக் கலங்கச் செய்கிரது... இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்களும் முறையான பதில் கூறவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காப்பாற்ற வேண்டிய மகனும் கைவிட்டுச் சென்ற நிலையில், அரவணைக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் அலட்சியமாக செயல்படுவதாக குமுறுகின்றனர் அந்தப் பாவப்பட்ட பார்வையற்ற தம்பதி... ஆட்சியரும், அதிகாரிகளும் தங்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன

Tags:    

மேலும் செய்திகள்