அடுத்தடுத்து அட்மிட் ஆன 18 பேர்.. ஒருவருக்கு.. - கலக்கத்தில் திருவாரூர்..

Update: 2024-09-19 12:07 GMT

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா என சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 18 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 35 வயதுடைய ஒரு நபருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் செயல்பட கூடிய வகையில் இந்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்