பெங்களூரில் இருந்து பறந்து வந்த கார்... வளைத்து பிடித்த தமிழக போலீசார்... உள்ளே இருந்த பொருள்?

Update: 2024-10-26 09:26 GMT

பெங்களூரில் இருந்து பறந்து வந்த கார்... வளைத்து பிடித்த தமிழக போலீசார்... உள்ளே இருந்த பொருள்?

திருவண்ணாமலை அருகே, பெங்களூரில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட குட்கா வகைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர், நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பதும், குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 200 கிலோ குட்கா பொருட்களையும், 2 காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்