ஆன்லைனில் கடன்.. Due தவறிய நபரின் போனுக்கு வந்த மனைவியின் ஆபாச போட்டோ - பரிதாபமாக பறிபோன உயிர்..

Update: 2024-07-12 16:23 GMT

ஆன்லைன் செயலி மூலம் தனக்கு கடன் கொடுத்த நிறுவனத்தினர், தன் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆவடி அடுத்த முத்தா பேட்டையை சேர்ந்தவர் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றின் ஓட்டுநரான அவர், ஆன்லைன் செயலி மூலம் ஒரு லட்ச ரூபாய் கடன் பெற்ற நிலையில், கடனை திருப்பி செலுத்துவதில் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆபாச மிசேஜ்கள் அனுப்பி நபருக்கு நெருக்கடி கொடுத்து வந்த நிறுவனத்தினர், ஒரு கட்டத்தில் நபரின் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நபர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்