மகனை குத்தி சரித்து... போலீசுக்கு போன் போட்டு; அப்பா சொன்ன வார்த்தை.... ஷாக்கில் தேனி

Update: 2024-09-20 17:53 GMT

தேனி மாவட்டம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. மனைவி சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் மகனுடன் வசித்து வருகிறார். சுப்பிரமணி ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில் முதுமை காரணமாகக் கடந்த சில வருடங்களாக வியாபாரம் செய்யாமல் வீட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மகன் சுகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு சொத்தை பிரித்துத் தருமாறு தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். சம்பவத்தன்று மது போதையில் தந்தையைக் கத்தியால் குத்த முயற்சித்து இருக்கிறார். அப்போது மகன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி மகனைச் சரமாரியாகக் குத்தி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு போலீசாருக்கு தகவல் அளித்து இருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுகுமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்