டிசம்பருக்கு முன் வந்த டிரைலர் - தூக்கத்தை இழந்து தவிக்கும் மக்கள்... பரிதாப காட்சி

Update: 2024-10-10 07:35 GMT

மாநகர பகுதிகளான சாரதா கல்லூரி சாலை, ஐந்து ரோடு, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் சுமார் இரண்டு மணிநேரம் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட முல்லை நகர், சொட்டையன் நகர், சாய்பாபா தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நள்ளிரவில் தூக்கமின்றி, வீடுகளுக்குள் புகுந்துவரும் நீரை தடுக்கும் பணியில், பொதுமக்கள் ஈடுபட்டனர். இதனால் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்