சென்னையில் வக்கீல்கள் முகமூடியில் உலவிய 2 விஷமிகள் - பேரதிர்ச்சி பின்னணி

Update: 2024-10-10 09:56 GMT

சென்னை வில்லிவாக்கத்தில் பத்திரிக்கையாளர் சங்கம் என்ற பெயரில் இயங்கி வந்த கட்டிடத்தில் போலியான பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் அரசு வேலைகளுக்கான ஆவணங்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆவணங்களைப் போலியாகத் தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதனை நடத்தி வந்த விஜய் ஆனந்த்,ரூபன் ஜெர்மையா ஆகிய இருவரையும் பிடித்து நடத்திய விசாரணையில் இருவரும் வழக்கறிஞர்கள் எனக் கூறிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் பத்திரிக்கையாளர் சங்கம் வைத்து பிரஸ் ஐடி கார்டுகளையும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்