பரந்தூர் வரை எதிரொலித்த கள்ளச்சாராயம் விவகாரம் - மக்கள் எடுத்த முக்கிய முடிவு

Update: 2024-06-23 16:15 GMT

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர், ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் கேட்டு, சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை நாளை நேரில் சந்தித்து மனு அளித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சோக சம்பவம் எதிரொலியாக, மனு அளிக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு, போராட்ட குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்