இந்தளவுக்கு தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குச்சா? - இங்கேயே வெள்ளமா? மிரளவிடும் காட்சிகள்

Update: 2024-10-05 03:18 GMT

ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்றாவது நாளாக கனமழை கொட்டித் தீர்த்த‌து. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், ஆம்பூரில் இருந்து ரெட்டி தோப்பு பகுதியை இணைக்கும் ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் சூழ்ந்த‌து. இதனால், பொதுமக்கள் அந்த பகுதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மழைநீர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், நெடுஞ்சாலைகளில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது. இதனால், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்