கண்ணில் மிளகாய் பொடி தூவி.. கட்டட தொழிலாளியை ஓட ஓட வெட்டி கொன்ற கும்பல் - மதுரையில் அதிர்ச்சி

Update: 2024-10-05 02:50 GMT

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முகத்தில் மிளகாய் பொடி தூவி கட்டட தொழிலாளியை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது.

மேலுக்கால் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்கிற சிவாஜி கட்டட வேலை செய்து வருகிறார். செக்காணூரணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு, வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மேலக்கால் கணவாய் கருப்பு கோயில் அருகே சதீஷை வழிமறித்த மர்ம கும்பல், அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சதீஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சதீஷ் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தொழிலாளி ஒருவர் மதுபோதையில் வீடு புகுந்து கத்தியால் குத்தியதில், சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.

திருவேடகம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, தமது மனைவி தவமணி, பேரன் மிதுன் ஆகியோருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர், மதுபோதையில் முத்துசாமியின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த சிறுவன் மிதுன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்