போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்து விட்டு திரும்பிய போது விபத்தில் பலியான நபர்

Update: 2024-09-25 14:19 GMT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்து விட்டு திரும்பிய நபர் விபத்தில் உயிரிழந்தார். சண்முக மூர்த்தி என்பவர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார். கல்லூரிக்குச் சென்ற இவரது மகள் வீடு திரும்பாத நிலையில், தனது மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்து விட்டு சண்முக மூர்த்தி திரும்பி வந்துள்ளார். அப்போது, அதே வழியாக வந்த கிரேன் வாகனம் மோதியதில், சண்முக மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்