வாட்டி வதைக்கும் வெயில்.. சுட சுட வானிலை மையம் சொன்ன தகவல்

Update: 2024-09-25 13:54 GMT

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மற்றும் நாளை சுமார் 2 முதல் 4 செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்