கல்லணையில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்.. பரவும் நோய்... அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-10-07 02:43 GMT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கல்லணையில் 3 நாட்களாக மீன்கள் செத்து மிதப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கும் தடுப்பு தொட்டியில் கடந்த 3 நாட்களாக பல லட்சம் மீன் குஞ்சுகள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்