#BREAKING || தமிழகத்தை உலுக்கிய விஷ சாராய மரணங்கள்.. கல்வராயன் மலையை சுற்றி வளைத்த போலீஸ்

Update: 2024-07-07 07:34 GMT

கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாவடிகள் அமைப்பு. பன்னிப்பாடி செல்லும் சாலை, வெள்ளி மலை செல்லும் சாலை, மூலக்காடு, சிறுவாச்சூர் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைப்பு. ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க, 100க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்