கந்துவட்டி கொடுமை.. வட்டி கேட்டு மிரட்டிய விசிக பிரமுகர் - தாய், மகள் எடுத்த விபரீத முடிவு

Update: 2024-07-15 16:37 GMT

கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாயுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆற்காடு பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவர், விசிக பிரமுகர் ராஜன் என்பவரிடம் 45,000 ரூபாய் கடன் வாங்கி, வட்டியுடன் சேர்த்து 54 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். எனினும், தொடர்ந்து பணம் கேட்டு ராஜன் மிரட்டுவதாக கூறி மகள் நந்தினியுடன் சேர்ந்து கார்த்திகா தீக்குளிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்