ரூ.10 கோடி... தமிழக மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு

Update: 2024-09-19 09:03 GMT

இலங்கை சிறையில் உள்ள 45 தமிழக மீனவர்களுக்கு பத்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இராமேஸ்வரம், பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி, அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி கைது செய்தனர்.எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 35 மீனவர்களும் புத்தளம் மாவட்டம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி விமலரத்னா, நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா 35 லட்சம் இலங்கை ரூபாய் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா 10 லட்சம் இலங்கை ரூபாய் அபராதமும் விதித்தார்.தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களுக்கு தலா 35 லட்சம் இலங்கை ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்