"நண்பா.. நீ நான் நாம் ஆவோம்.." சிவகங்கையில் நடந்த அபூர்வம் | Sivaganga | Thanthitv

Update: 2024-09-29 09:53 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மத நல்லிணக்க கந்தூரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நபிகள் பிறந்த மாதத்தை கொண்டாடும் வகையில், சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியில் மதநல்லிணக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கரிசல்பட்டியில் உள்ள பள்ளிவாசலில், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனும், நலமுடனும் வாழசிறப்பு துவாக்கள் ஓதப்பட்டன. சுமார் 500 குடும்பத்தினருக்கு நெய்சோறு, ஆட்டுக்கறி மற்றும் முட்டைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன. பின்னர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்