மருத்துவமனையில் இளைஞர் செய்த அட்ராசிட்டி- தென்காசி அருகே பரபரப்பு

Update: 2024-09-07 15:53 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் பெண் காவலரிடம், மதுபோதையில் வந்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த குருநாதன், தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கக்கோரி வாக்குவாதம் செய்ததுடன், பெண் காவலரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குருநாதனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். பின்னர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்