கோடிகளில் குவித்த மாட்டுச்சந்தை... உற்சாகத்தில் விவசாயிகள்...மாஸ்காட்டிய ஓமலூர்

Update: 2024-05-31 13:32 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புகழ்பெற்ற மாட்டு சந்தை நடைபெற்ற நிலையில் 2,500க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கால்நடைகளை வாங்கியும், விற்பனை செய்தும் சென்றனர். இதில், பால் மாடுகள் மற்றும் சினை மாடுகள் 30 ஆயிரத்தில் இருந்து 85 ஆயிரம் ரூபாய் வரையும், காளைகள் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரையும் விற்பனையானது. மேலும் இன்று கூடிய சந்தையில் மூன்று கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்