பள்ளி சென்ற சிறுவன் கடத்தல்..?.திக்.. திக் நொடிகளை கடந்து தப்பி வந்த மாணவன்

Update: 2024-10-16 09:47 GMT
  • பள்ளி சென்ற சிறுவன் கடத்தல்..?.திக்.. திக் நொடிகளை கடந்து தப்பி வந்த மாணவன் - துருவித்துருவி விசாரிக்கும் போலீசார்
  • ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே தன்னை மர்மநபர்கள் இருவர் காரில் கடத்திச் சென்றதாக கூறி பகீர் தெரிவித்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவாடானை அடுத்த சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய அமலதாஸ். இவரின் 12 வயது மகனான ரெக்சன் என்ற சிறுவனை, அவர் பள்ளி சென்ற போது அடையாளம் தெரியாத இருவர் காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் அருகே, இயற்கை உபாதை கழிப்பதற்காக இருவரும் காரை நிறுத்தியதாகவும், அப்போது சிறுவன் தப்பி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
  • திருவாடானை பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து அரசு பேருந்து ஏறி சின்னக்கீரமங்கலம் வந்ததாக கூறிய சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்