பொதிகை எக்ஸ்பிரஸ்க்கு நேரவிருந்த பெரும் விபரீதம்.. கதிகலங்க வைக்கும் தகவல்

Update: 2024-10-02 07:18 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ரயிலை கவிழ்க்க முயன்ற இரண்டு சத்தீஸ்கர் மாநில தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர். பொதிகை விரைவு ரயில் கடந்த 26ம் தேதி, கடையநல்லூரை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் சிலர் பெரும் கல்லை வைத்தனர். இந்த கல்லில் மோதி, ரயில் இன்ஜினின் முன் பக்க தகடு சேதமடைந்தது. இதுகுறித்த ரயில்வே போலீசாரின் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த இரண்டு கல்குவாரி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பால்சிங் பகேல், ஈஸ்வர் மேடியா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்