பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு.. பங்கேற்க விரும்புவோர் என்ன செய்யவேண்டும்?

Update: 2024-05-28 14:25 GMT

பழனியில் நடைபெறும், முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்கவும், தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 2024 ஆகஸ்ட் 24 , 25 -ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஏதுவாக, புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை, இந்து சமய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் திறந்து வைத்தனர். இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் வருகின்ற 15.07.2024- ம் தேதிக்குள் பதிவு செய்தாக வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் 20.06.2024 ஆம் தேதிக்குள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்