நடுரோட்டில் ஆளில்லாமல் தனியாக ஓடிய பைக்... பின்னாடியே துடித்த உயிர்கள்

Update: 2024-10-01 11:04 GMT

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே, கார் மோதிய விபத்தில், தம்பதியர் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்த நிலையில், பைக் மட்டும் ஆளே இல்லாமல் நீண்டதூரம் சென்று விழுந்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மோடமங்கலத்தில் இருந்து சௌந்தர்ராஜன் - நந்தினி தம்பதியினர், பள்ளிப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வெப்படை அருகே மக்கிரிபாளையம் பிரிவு சாலையில் சென்றபோது, சங்ககிரியில் இருந்து வந்த கார், இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் தம்பதியர் பைக்கில் இருந்து குதித்த நிலையில், பைக் மட்டும் ஆளே இல்லாமல் நீண்ட தூரம் சென்று விழுந்தது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தம்பதியர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்