மலர்,சாம்பிராணி,பத்தி.. வைத்து மைதானத்தில் இரவில் பூஜை... வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-10-19 17:09 GMT

நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு மைதானத்தில், பூஜை நடந்ததாக வைரலான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் உள்ள, வாலிபால் மைதானத்தின் தூணுக்கு, மலர்தூவி சாம்பிராணி மற்றும் பத்தி வைத்து பூஜை நடந்ததாக வீடியோ வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் கூறுகையில், இது எப்போதும் வழக்கமாக வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் நிகழ்வுதான் என்று தெரிவித்தார். எனினும் விளையாட்டரங்கில் ஒரு மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற்று இருப்பது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்