முல்லைப் பெரியாறு அணை பார்க்கிங் விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-03-11 13:15 GMT

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மையம் அணை ஒப்பந்த பகுதிக்கு வெளியில் இருப்பதாக சர்வே ஆஃப் இந்தியா அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது, கூட்டு 'சர்வே அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் 'சர்வே ஆஃப் இந்தியா' அமைப்பு தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மையம், அணை ஒப்பந்த பகுதிக்கு வெளியில் இருப்பதாக சர்வே ஆஃப் இந்தியா அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளாக நீதிபதிகள் தெரிவித்ததுடன், கூட்டு 'சர்வே'அறிக்கையை தமிழ்நாடு கேரள, அரசுகளுக்கு வழங்க பதிவாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்