நள்ளிரவில் கேட்ட சத்தம்.. உயிர் பயத்தில் குடும்பம்.. கண்ணீர் வடிக்கும் பெண்

Update: 2024-10-24 09:14 GMT

நள்ளிரவில் கேட்ட சத்தம்.. உயிர் பயத்தில் குடும்பம்.. கண்ணீர் வடிக்கும் பெண்

திண்டுக்கல் கொடை ரோடு அருகே தமிழக அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

நிலக்கோட்டை மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, இந்திரா நகர் கிராமத்தில் தமிழக அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீட்டில் சண்முகம் - ராணி தம்பதி மகன் உள்பட பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த வீடு மிகவும் மோசமான நிலையில் காணப்படும் நிலையில்

தொடர் கனமழை காரணமாக, நள்ளிரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது... விழுந்த பகுதியில் யாரும் இல்லாததால் குழந்தைகள் உள்பட அக்குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்... தொடர் மழை பெய்து வரும் நிலையில் வீடு முழுவதும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அவர்கள் பீதியுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்