காலையே கோவையை பதறவைத்த திக் திக் சம்பவம்... அலறிய பயணிகள்... அந்த நொடியில் டிரைவர் என்ன செய்தார்?

Update: 2024-10-24 08:48 GMT

காலையே கோவையை பதறவைத்த திக் திக் சம்பவம்... அலறிய பயணிகள்... அந்த நொடியில் டிரைவர் என்ன செய்தார்?

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

இன்று காலை பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் ஒத்தக்கால் மண்டபம் அருகே பேருந்தின் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது... இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு என்னவென்று பார்த்துள்ளார்... அப்போது எஞ்சினில் இருந்து அதிகமாக புகை வருவதைக் கண்ட ஓட்டுநரும் நடத்துநரும் அவசர அவசரமாக பயணிகளை கீழே இறக்கி விட்டு பேருந்தை டிப்போவுக்கு கொண்டு செல்ல நினைத்து பேருந்தை இயக்கியுள்ளனர். அப்போது புகைந்து கொண்டு இருந்த எஞ்சின் பயங்கரமாக தீப்பற்றி எரியத் துவங்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடித் தீயை அணைத்தனர். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்