மருதுபாண்டியர்கள் குறித்து அவதூறு பேச்சு? .." அவன இப்போ போக சொல்லுங்க''

Update: 2024-10-24 09:18 GMT

மருதுபாண்டியர்கள் குறித்து அவதூறு பேச்சு? .." அவன இப்போ போக சொல்லுங்க''


மருதுபாண்டியர்கள் குறித்து அவதூறு பேச்சு? .." அவன இப்போ போக சொல்லுங்க'' - அதிகாரிக்கு காற்றில் பறந்த மரியாதை

சிவகங்கை திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்களின் 223வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட நிலையில் அங்கு அரசு அதிகாரி மருது பாண்டியர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி கடும் வாக்குவாதம் எழுந்தது. திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் தனுஷ்கோடி என்பவர் மருது பாண்டியர்கள் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மருது பாண்டியர்கள் விழாக்குழுவினர் கடும் வாக்குவாதம் செய்தனர். சாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டி தனுஷ்கோடியை உடனடியாக அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்