வடமாநில சலூன் கடை தொழிலாளர்கள் மீது தாக்குதல் - போலீசார் அதிரடி

Update: 2024-07-18 06:41 GMT

மேட்டூரில் முடி வெட்டியதற்கு பணம் கேட்ட வட மாநில சலூன் கடை தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூக்கனாம்பட்டியில் அமீர், சங்கர் ஆகிய இரண்டு வட மாநில தொழிலாளர்கள் சலூன் கடை நடத்தி வருகின்றனர். கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் குணசேகரன் இருவரும் முடிவெட்டி விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். இதுகுறித்து கேட்ட தொழிலாளர்களை அவர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்