மாஞ்சோலையில் இறங்கிய டெல்லி.. பரபரக்கும் நெல்லை

Update: 2024-09-19 14:48 GMT

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம், தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் 4 நாட்கள் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் நேற்று முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை மற்றும் மனு அளித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் நேரில் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து மாஞ்சோலை பகுதி மக்களிடமும் விசாரணை நடத்திய நிலையில், 2வது நாளான இன்று காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்