மகாவிஷ்ணு விவகாரம்.. துரை வைகோ பரபரப்பு பேட்டி.! | Maha Vishnu

Update: 2024-09-09 02:17 GMT

மகா விஷ்ணு ஆற்றியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல; அது சனாதன சொற்பொழிவு என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறினார். சென்னையில் கடந்த மாதம் நடந்த மதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்டு விட்டு மதுரை திரும்பிய கட்சி நிர்வாகிகள் பச்சமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு 45 லட்ச ரூபாய் நிதியுதவியை துரை வைகோ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சென்னை பள்ளியில் மகா விஷ்ணு ஆற்றியது சனாதன சொற்பொழிவு என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்