``உங்களுக்கும் அவருக்கு நேர்ந்த கதி தான்'' - தீயாய் பரவும் மதுரை கமிஷனரின் ஆடியோ

Update: 2024-08-09 08:58 GMT

காவல்துறையினர் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

மதுரை மாநகர் பறவை சோதனை சாவடியில் விவசாயி ஒருவரை சிறப்பு ஆய்வாளரான தவமணி ஆபாசமான வார்த்தைகளால் திட்டியது, இணையத்தில் வைரலானது. இதனையடுத்து சிறப்பு ஆய்வாளர் தவமணி, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், காவல்துறையினருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், காவல்துறையினர் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவேண்டும் என்றும் ஒரு சிலர் செய்யும் தவறுகளால், மொத்த காவல்துறைக்கும் அவதூறு ஏற்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்