தமிழகம் முழுவதும் ஒரே நாளில் திணறிய டோல்கேட் - போலீசார் குவிப்பு.. பரபரப்பு

Update: 2024-09-17 04:34 GMT

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி, சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினர் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும் மனிதநேய மக்கள் கட்சியினர், தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகைளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச் சாவடி அருகே, மாநில துணை பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான் தலைமையில் திரண்ட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென போராட்டக்காரர்கள், சுங்கச் சாவடியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்